Friday, May 4, 2018

கடவுள் வாழும் வீடு . 2



                                              கடவுள் வாழும் வீடு . 2



 அனைவருக்கும் இனிய வணக்கம்.
  
கடவுள் வாழும் வீடு அப்படின்னு தலைப்பு வச்சிட்டு ஏதோ வேற வேற கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கானே என்னடா இதுன்னு நினைக்க தோணும் கோவிலுக்கு போகனும்ன அதுக்கான வழியை தேர்ந்தெடுத்து தான போகணும் அது போலத்தான் இதுவும் 

 சரியான வழியில் போனாத்தான சரியான இடத்தை அடைய முடியும். அதுக்கு தானே நாம எங்க போனாலும் முதலில் அதற்கான வழியைத் தெரிந்து கொண்டு செல்ல ஆசைப்படுகிறோம்.

 சரி சரி கோபப்படாதீங்க விசயத்துக்கு வருவோம்

 மனம் என்னும் மந்திரக்கோலை  சரியான திசையில் செயல்படுத்த விரும்பினாலும் நம்மை விட்டு வேறு இடத்திற்கு சென்று வம்பில் மாட்டி விட்டு சண்டை உருவாக்குவதே அதன் (மனம்) வேலையாக பலருக்கும் பல காலமாக செய்துகொண்டிருப்பதே வாடிக்கையாகி விட்டது .

எல்லாம் முடிந்த பிறகு யோசித்து பார்த்தாலும் நமக்கு அதன் செயல் விளங்குவதே இல்லை. இங்கு தான் நமக்கான பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நடந்த நிகழ்வுகளை மட்டுமே நினைத்து நினைத்து நடக்க போகும் நிகழ்வுகளிலும் பிரச்சனையை உருவாக்கி கொள்வதிலேயே நம் மனது செல்கிறதே தவிர அதற்கான விடையை அறியமுடிவதே இல்லை 

ஏன் இந்த அவல நிலை ???

  சில தவறுகள் நமதாக இருந்தாலும் எற்றுகொள்வதில் நமக்கு மிகுந்த தயக்கம் இருக்கிறது அந்த தவறுகளை மறைக்க முயல்கிறோமே தவிர அதை தான் தான் செய்தோம் என்று வெளிப்படுத்த விரும்புவதேயில்லை .

சின்ன சின்ன தவறுகளுக்கும் அதற்கான தண்டனைகள் உண்டு என்பதை மறந்து  மேலும் மேலும் அதையே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம் உதாரணமாக ஒன்று சொல்கிறேன் தினசரி கோவிலுக்கு செல்லும் சிலரை பற்றி பார்க்கலாம் 

ஒருவர் ஆற்றில் குளிக்க வருகிறார் வந்தவுடன் தன் ஆடைகளை துவைத்து சுத்தமாக்கி பின்னர் தானும் நன்றாக ஆற்றில் மூழ்கி தைக்கும் குளித்து சுத்தம் செய்து கொண்டு வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார் 

அடுத்தவர் வருகிறார் தன் ஆடைகளை கழற்றி கரையின் மேலே வைத்துவிட்டு அவர் நன்றாக குளித்துவிட்டு மீண்டும் அதே ஆடையை உடுத்திக் கொண்டு வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார்

இன்னொருவர் வருகிறார் அவர் ஆடைகளை கழற்றாமல் கை கால் மற்றும் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு நேராக வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார்

மற்றொருவர் வருகிறார் ஆடையையும் கழட்டவில்லை கைகால்களையும் கழுவவில்லை ஆற்றில் ஓடும் நீரை மட்டும் கையால் அள்ளி மூன்று முறை தலையில் தெளித்துக் கொண்டு வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார்


இவர்கள் வழிபாடு செய்யும் கடவுள் யாருக்கு எப்படி அருள் புரிவார் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் ........... ( நானும் இதைப் படித்தவுடன் மிகுந்த யோசனை செய்தேன் ஆனால் அதற்கான விடையை கண்டுபிடிக்க எனக்கு .....) 

தேடுவோம் வாருங்கள் அடுத்த பதிவில் .............

முதல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் 








   கடவுள் வாழும் வீடு . 1




No comments:

Post a Comment

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...