Tuesday, May 29, 2018

கடவுள் வாழும் வீடு . 4

                   
                                                கடவுள் வாழும் வீடு . 4

இனிய வணக்கம்  அனைவருக்கும் ,


   (( நாம் விருப்ப பட்ட இடத்தில் கோவிலைக் கட்டி வா என்றால் வந்துவிடுவாரா ?? அவ்வளவு  பெரிய திறமை படைத்தவர்களா  நாம் ?? கடவுளையே நாம் சொன்னபடி கேட்க வைக்க முடியுமென்றால் இதில் யார் பெரியவர் திறமையானவர் சக்தி படைத்தவர் யார் ??? கடவுளா ?? நாமா ??))


  இந்த கேள்வியோடு அன்று முடித்திருந்தோம். இது பலருக்கும் மனதில் கண்டிப்பாக தோன்றியிருக்கும் , ஆனால் இதை யாரிடம் கேட்பது கேட்டால் நம்மை ஏதாவது சொல்லுவார்களோ என்று ஒரு விதமான சந்தேக உணர்வுடனே நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியாக கடந்து விடுகிறோம் 

நானும்  இதே மனநிலையில் தான் இதுவரை கடந்திருக்கிறேன் . பலரிடம் கேட்டாலும்  சரியான பதில் கிடைக்கவில்லை ஒவ்வொரு காரணங்கள்  சொல்லி தட்டிக் கழிக்கவே விரும்பினார்கள் . ஆத்தீகனுக்கும் நாத்திக கேள்விகள் பல உண்டு . ஆனால் அதை வெளியில் கேட்பதே  இல்லை .


ஆகம விதிப்படி பூசை புனஷ்காரங்கள் செய்தால் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் கடவுள் வருவார் என்று பெரியோர் வாக்கு . அந்த விதிகள் படி பூசை செய்பவர்கள் அவ்வளவு பெரிய உத்தமர்கள் மகான்கள் யார் இங்கே ????

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த பூசை செய்யும் மானிடர்களா இந்த உத்தம அவதாரங்கள் ??
பல கோவில்களில் தட்டில் காசு போடவில்லை என்றால்  விபூதி கூட தரமாட்டார்கள் ???? அந்த உத்தமர்கள் 

அவர்கள் எல்லாம் கடவுளுக்கு மரியாதை கொடுக்கிறார்களா  ? மனிதனுக்கா  ? பணத்துக்கா ? 

பணத்துக்கு தான் என்று நம் அனைவருக்குமே தெரிந்தே அவர்களிடம் பயந்து பவ்யம் காட்டி குனிந்து கூப்பாடு போடுவது எதற்கு (உண்மையான சிலரும் இருக்கிறார்கள் அவர்களை குறை சொல்லவில்லை ) அவர் கடவுளின் சிற்பத்திற்கு அருகில் இருக்கிறார்  என்ற ஒரே காரணத்திற்க்காக  மட்டுமே என்பதை எத்தனை பேர் மறுக்க இயலும். 

சரி கடவுள் அவரோடு அந்த இடத்தில் தான் இருக்கிறார் என்றால் அவர்களை ஏன் தண்டிப்பதில்லை என்ற கேள்வி தானாகவே தோன்றும், தண்டித்துக் கொண்டு தான் இருக்கிறார்  என்பதும் உண்மை . பலரிடம் கையேந்தி பிச்சையெடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வைத்திருக்கிறாரே  அதுவே பெரும் தண்டனை இல்லையா ? என்ன இவர்கள் ஆடம்பரமாக பிச்சை கேட்கிறார்கள் அவ்வளவு தான் .

இவர்களைப் போன்றவர்களை அழைத்து வந்து புதிய கோவில்களை  பூசை செய்ய வைத்து தினசரி கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அந்த இடத்தில் கடவுள் அருளைப் பெற இயலுமா ?


பெற முடியும் என்று தான் அழைத்து வருகிறார்கள்  என்ன செய்ய அழைத்து வருபவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று  அதையும் ஆராய்ந்து பார்த்தால் .............

தேடுவோம் கடவுள் வாழும் வீட்டை இன்னும் ..........






    

No comments:

Post a Comment

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...