எல்லா ஆண்களுக்கும் தனக்கு அழகான மனைவி அமைய வேண்டும் , ஆடம்பரமான வீடு வேண்டும் , தான் பயணம் செய்ய வித விதமான கார் வேண்டும், பெரிய பெரிய உணவகங்களில் உணவு unna வேண்டும் , வித விதமான உடை அணிய வேண்டும் , தனது மனைவிக்கு வித விதமான ஆடை அணிகலன்கள் போட்டு அழகு பார்க்க வேண்டும் , தொழில் துறையில் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும், எந்த விழாவானாலும் சரி தன்னை முன்னிறுத்த வேண்டும் என்று எந்த இடத்திலும் எந்த நிலையிலும் தான் தான் என்பர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த நினைத்து வாழ்ந்தவர்கள் தன் நிம்மதியையும் சந்தோசத்தையும் துளைத்துவிட்டு இறுதியாக அதை தேடுவதிலேயே தன் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.
தன் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களே தவிர அவள் அன்பாக இருப்பாளா என்று அறிய முற்ப்படுவதில்லை. தன் மனைவியை அழகுபடுத்தி தான் கவனிப்பதை விட மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவதையே விரும்புகிறான் அவளை ஒரு காட்சிப் பொருளாகவே நினைக்கிறான் அந்த அழகு உள்ளவரை ,அந்த அழகு குறைய குறைய ஒரு வெறுமை அவனுள் குடி கொள்கிறது ,பின்னர் தன் குழந்தைகளை காட்சிப் பொருளாக்குகிறான்,இதிலேயே அவன் கவனம் செல்கிறதே தவிர பாசம் சந்தோசம் அன்பு என்ற எல்லாமே பணம் மட்டுமே என்ற
எண்ணத்திலேயே வாழ்ந்து முடிக்கும் போது கடைசி நிமிடத்தில் அவன் மனதில் தோன்றுகிறது
தான் வாழாமலே இந்த உலகைவிட்டு செல்கிறோம் என்று அப்பொழுதான் தோன்றுகிறது
தன்னிடம் வேலை செய்பவர்களிடம் காட்டும் அன்பைக் கூட தன் மனைவியினிடத்தில் காட்ட விரும்புவதில்லை
ஒரு உதாரணம் சொல்லுகிறேன்
என் கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை என்று எழுதி வைத்துவிட்டு தன் மகனை கொன்றுவிட்டு தானும் இறந்து விட்டார் ஒரு பேராசிரியரின் மனைவி அவரும் ஒரு தொடக்க பள்ளி ஆசிரியை அவர் இறக்கும் முன்னர் எழுதி வைத்த ஒரு கடிதம்
வாழ ஆசைப்பட்டு தான் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன் அதற்க்கு நான் அன்றே இறந்திருக்கலாம் இன்று இந்த ஐந்து வருடங்களாக தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று இந்த உடல் மட்டும் ஏன் இருக்கவேண்டும் என்று தான் இந்த முடிவை எடுத்து உள்ளேன்
என் கணவன் என்ற மிருகத்திடம் என் குழந்தையை விட்டு செல்ல விருப்பமில்லை படிக்க வைக்கிறேன் என்ற பெயரில் அடித்தே கொன்றுவிடுவான் என் குழந்தையை இந்த உலகில் அனாதையாய் விட்டு செல்ல விரும்பவில்லை , என்னுடனே பயணிக்கட்டும்
என் சாவிற்கு காரணமான என் கணவனை தண்டியுங்கள்
இப்படிக்கு இந்த உலகில் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாத செல்லும் சுதா திருமகள்
ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவிக்கே இந்த நிலைமை ஆசிரியர் என்றாலே அனைவரும் குருவாக வழி பட வேண்டியவர்கள் என்று அனைவரு அறிந்த ஒன்று ஆனால் இப்பொழுதெல்லாம் படித்த மிருகங்கள் செய்யும் காரியங்களுக்கு படிக்காத பாமர மக்களே சிறந்தவர்கள் .....................................................
இப்படிக்கு இந்த உலகில் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாத செல்லும் சுதா திருமகள்
ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவிக்கே இந்த நிலைமை ஆசிரியர் என்றாலே அனைவரும் குருவாக வழி பட வேண்டியவர்கள் என்று அனைவரு அறிந்த ஒன்று ஆனால் இப்பொழுதெல்லாம் படித்த மிருகங்கள் செய்யும் காரியங்களுக்கு படிக்காத பாமர மக்களே சிறந்தவர்கள் .....................................................
தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் ஓட்டுகளையும் தவறாமல் பதிவிடுங்கள்
இந்த கொடுமை பல குடும்பங்களில் வெளியே தெரியாமல் நடந்து கொண்டுதானிருக்கிறது............
ReplyDeleteவாசிக்கும் போதே இதயம் பதறுகிறது.
ReplyDeleteI like it. I 100% accept your words. I saw some people like this characters. Its Good Message for all.
ReplyDeleteMemikader