Thursday, October 21, 2010

இதென்ன கொடுமை

அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்                                ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் ஏன் மற்றவர்களைப் பற்றி பெருமையாக பேசுவதையே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள் எதனால் இப்படி ஒரு மனப்பான்மை ,உன்னை பற்றி ஒருநிமிடம்நினைத்துப்பார்,நீ வந்த வாழ்க்கை பாதையை நினைத்துப்பார் நாம் மனிதனாக பிறப்பது ஒரு முறை மட்டுமே,மறு பிறப்பு உண்டா இல்லையா என்பதைப் பற்றி நமக்கு தெரியாது ஏன் நம்மையே நாம் அழித்து கொண்டிருக்கிறோம்     நமக்கு இந்த அறிய பொக்கிசமான இந்த பிறப்பை கொடுத்தவர்கள் நம்பெற்றோர்கள்,அவர்களே நம் முதல் தெய்வங்கள் அவர்களே நம் கண்களுக்கு தெரிந்த நடமாடும் தெய்வங்கள் ,ஆனால் இன்று அந்த பெற்றோர்களை காக்க பல ஆசிரமங்கள் தோன்றிக்கொண்டிருக்கிறது இது உண்மையிலேயே நல்லவிசயமா,அவர்கள் அவ்வளவு துரோகமா செய்துவிட்டார்கள், வயது ஏற ஏற அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அவர்கள் இப்பொலுதெல்லாம் ஒரு தொல்லையாகவே தெரிகிறது இதற்க்கெல்லாம் என்ன காரணம் பணம்,இதை மட்டுமே விரும்பும் சமூகம் இப்பொழுது அதிகரித்துக்கொண்டிருக்கிறது,அடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புகிறவர்களுக்கும் இவர்கள் ஒரு பாரமாகவே கருதுகிறார்கள் சிலர் தன் பெற்றோர்கள் படிக்காதவர்களாகவும் அழகு குறைந்தவர்களாகவும் இருந்தால் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவே தன் கவுரவம் பாதிப்பதாக நினைத்து அவர்களை ஒதுக்கிவைக்கிறார்கள் ஆனால் இவ்வளவு இன்னல்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்ளவே செய்கிறார்கள்                           இதோடு மட்டும் அல்ல பணத்துக்காகவும் சொத்துக்காகவும்சொத்து தகராறில் ஒரே குடும்பத்தில் 6 பேர் வெட்டிக்கொலை, தன் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களை  கொலை செய்யவும் பலர் தயாராகுமளவுக்கு இந்த நாட்டின் கலாச்சார முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது . தன் சொந்தவிசயங்களில் தலையிடும் பெற்றோர்களை விரும்புவதில்லை அவர்களை ஒதுக்கவே விருப்பப்படுகின்றனர். அதனால் அவைகளை விட்டு விலகுவதையே  விரும்புகின்றனர் 
   இந்த  பண்பாடு தான் நாகரீக வளர்ச்சியா அனைத்து பாச பந்தங்களையும் வேரில் வெந்நீர் ஊற்றி அழித்துக்கொண்டு பணம் என்ற ஒன்றை நம்பியே இன்றைய சமுதாயம் முன்னேறிக்கொண்டிருக்கிறது தாத்தா ,பாட்டி தான் குழந்தைகளின் முதல் நட்பு அவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறி அவர்களின் அனைத்து செயல்களுக்கும் எது சரி எது தவறு என்று புரியும் படி சுட்டிக் காட்டி அவர்களை வழி நடத்தி செல்வார்கள் அதை குழந்தைகளும் உடனே ஏற்றுக்கொள்வார்கள்   .
       ஆனால் இன்றைய குழந்தைகள் நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு அந்த பாசப்பிணைப்பு கிடைப்பதில்லை அவர்கள் ஒரு இயந்தர தனமான வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டார்கள் ..........................................................இன்னும்தொடரும் 

1 comment:

  1. இப்படியும் வாழத்தான் வேண்டுமா?

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...