Monday, April 9, 2018

கடவுள் வாழும் வீடு . 1

                                              கடவுள் வாழும் வீடு . 1 


   வீடு என்பதும் கோவிலே . நம்  முன்னோர்கள் சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த வீடுகளும் அவர்கள் வாழ்ந்த மண்ணும் நமக்கு கோவில்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும் தெரிய வாய்ப்பில்லை இன்று பலருக்கும் .

நாம் வாழும் வீடுகளில் ஆயிரம் வாஸ்து சாஸ்திரங்களை பார்த்து பார்த்து கட்டியும் நிம்மதி இல்லாமல் வாழ்பவர்களே மிக மிக அதிகம் என்பதை மறுக்க இயலாது. எதனால் இந்த நிலை வருகிறது என்று எவரும் சிந்திக்க நேரமில்லை, என்ன செய்வது எந்த நேரமும் மற்றவர்கள் என்ன நினைப்பர்களோ என்று யோசித்து யோசித்து பயந்து பயந்து வாழ்ந்தே பழகிவிட்ட நமக்கு நம் வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

நாமும் தினசரி வீட்டில் பூஜை புனஸ்காரம் செய்து கோவில் கோவிலாக சென்றும் நிம்மதி மட்டும் கிடைக்காமல் சண்டையிட்டு சண்டையிட்டு அதுவும் வெளியே தெரியாமல் மற்றவர்கள் முன்னால் பொய்யான புன்னகைகளை வரவழைத்துக் கொண்டு வாழ்வது இருக்கிறதே இதை விடவா நரகம் ஒன்று இருந்துவிடப் போகிறது 

எதனால் இத்தனை துன்பங்கள் வெளியில் பகட்டாக வாழ்ந்தாலும் நினைத்ததை நினைத்த நேரத்தில் வாங்க முடிந்தாலும் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடிந்தாலும் மனம் என்னும் வீடு வேதனையை மட்டுமே மிக பெரிய பாறாங்கல் போன்ற பாரத்தை மட்டும் சுமந்து கொண்டே இருக்கிறதே எதனால் என்று கரணம் தெரியாமலே தவித்து கொண்டிருக்கிறோம் 


அப்படிப்பட்ட மனங்களுக்கு விடை தேடுவோம் வாருங்கள் ..........

No comments:

Post a Comment

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...