Saturday, May 5, 2018

கடவுள் வாழும் வீடு . 3

                                                   
                                           கடவுள் வாழும் வீடு . 3

                                 




    வணக்கம் அனைவருக்கும் ,

நேற்றைய பதிவில்  நான்கு நபர்கள் நான்கு விதமான முறைகளில் கோவிலுக்கு சென்று வழிபட போகிறார்கள். அவர்களுக்கு கடவுள் எவ்வாறு அருள் புரிவார் என்று  பல விதமான யோசனைகளை நமக்கு தோன்றியிருக்கும் 

இங்கு ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது . கடவுள் உடல் சுத்தத்தை எதிர் பார்த்து அருள் புரிவாரா (அ) மன சுத்தத்தை வைத்து அருள் புரிவாரா ? என்ற  மிகப் பெரிய சந்தேகத்தை நம் மனதில் தானாக தோன்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

(கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கு நாம் செல்ல வேண்டாம் )  இருக்கும் என்று நினைப்பவருக்கு  இருக்கிறார்.  இல்லை என்று நினைப்பவருக்கு இல்லை  அதனால் அந்த ஆராய்ச்சிக்கு நாம் செல்ல வேண்டாம் 

சிவ வாக்கியரின்  பாடலில்  

" நட்ட கல்லைச் தெய்வமென்று  நாலு  புட்பம் சாத்தியே 
சுற்றி வந்து  மொண மொணவென்று  சொல்லும் மந்திரம் ஏதடா ?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?          (சிவ வாக்கியர்  பாடல்  -520)

இதை  சொன்னவர் நாத்திகர் அல்ல ஆத்திகர்  


இவர்கள் நால்வரும் நட்ட கல்லை நோக்கி  தான் செல்கின்றனர் நான்கு வழிகளில் கடவுளின் அருள் கிடைத்திருக்குமா ??  நட்ட கல்லில் கடவுள் நேரடியாக தொடர்பு கொள்ளுவாரா ? 

    சிவ வாக்கியரின் சொல்வதும் பொய்யென்று ஒதுங்கி சென்று விட முடியாது ஆனால் அது மட்டுமே உண்மையென்றால் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்கள் அதற்காக பல இலட்சங்களை செலவு செய்து பூசை செய்து வழிபடுகிறவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றல்லவா முடிவாகிவிடும்.

   அதுவுமில்லாமல் இப்பொழுதெல்லாம் அடுத்த தெருவில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது அந்த தெருவில்  வசிப்போர் ஏதாவது சொல்லிவிட்டால் உடனே கோபம் வந்து தன தெருவிலேயே கோவிலைக் கட்டிக் கொள்கிறார்கள்  உடனே பூசை செய்து கடவுளை அவர்கள் தெருவிற்கே வரவைக்கும் வல்லமை படைத்தவர்கள் மிக மிக பெரியோர்கள் வாழும் உலகு இது கடவுளும் உடனே அங்கு வந்து அருள் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார் . தீபாராதனை தட்டில் விழும் காசைப் பொறுத்து எலுமிச்சை பழமாகவும் , சாமியின் கழுத்தில் கிடக்கும் மாலையைக் கூட தன கழுத்தில் வந்து விழும் அளவிற்கு அருள் புரிகிறார் இன்றைய நவ நாகரீக கடவுள் . இதைப் பெருமையாக காட்டிக்கொள்ள தட்டில் கொஞ்சம் அதிகமாக பணத்தை போட்டு அருளைப் பெற்றுக் கொள்கின்றனர் .


இப்படி நாம் நினைத்த இடத்தில் கோவிலைக்கட்டி நாமே கடவுளை வரவைக்க முடியுமென்றால் கடவுள் நமக்கு என்ன அடிமையா ?  நாம் விருப்ப பட்ட இடத்தில் கோவிலைக் கட்டி வா என்றால் வந்துவிடுவாரா ?? அவ்வளவு  பெரிய திறமை படைத்தவர்களா  நாம் ?? கடவுளையே நாம் சொன்னபடி கேட்க வைக்க முடியுமென்றால் இதில் யார் பெரியவர் திறமையானவர் சக்தி படைத்தவர் யார் ??? கடவுளா ?? நாமா ??




கடவுள் வாழும் வீட்டை தேடுவோம் தொடர்ந்து ...........


முந்தைய பதிவுகளைப் படிக்க 

கடவுள் வாழும் வீடு .1
https://anbedeivam.blogspot.in/2018/04/1.html



கடவுள் வாழும் வீடு . 2
https://anbedeivam.blogspot.in/2018/05/2.html

1 comment:

  1. Mika mika arumaiyana pathivu nalla muyarchi thodarvatharku vazhthukkal

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...