Monday, November 8, 2010

ஒரு தோலுரிந்த உண்மை

ஒரு தோலுரிந்த உண்மை ,
  நம் படைப்பில் இரு நிலையை கொடுத்த இறைவன் இப்படி ஒரு அவல நிலையை கொடுத்திருக்க கூடாது ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் இந்த கொடுமையை எவராலும் தாங்க முடியாது நாம் பேசுவதற்கு மிக சுலபமாக இருக்கும் அதை அனுபவித்து பார்ப்பவர்களுக்கு தான் அதன் வேதனை தெரியும்
  பசி இந்த கொடுமையை யாராலும் தாங்க இயலாது மனிதனாய் பிறந்து பட்டினியால் சாவதென்பது இருக்கும் தண்டனைகளிலே மிகவும் கொடுமையான தண்டனை,இந்த நிலைக்கு ஆளாக வேண்டிய காரணம் என்ன 
 இதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் ,சிலருக்கு வருத்தமாகக் கூட இருக்கலாம் ,பலருக்கு தனக்கு தேவையை மீறிய பல வசதி வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் ஒருவேளை சாப்பாட்டிற்கு யாராவது வந்து கேட்டால் விரட்டிவிடுகிறார்கள் அந்த வீட்டில் வளரும் நாய்கள் கூட உயர்ந்த வகை உணவுகளையே  உட்கொள்ளும் 
   ஆனால் அன்பு பாசம் மிகுந்த பல கிராமங்கள் மிக அடர்ந்த காடுகளிலும் மற்ற பல இடங்களிலும் நம் நாட்டில் உண்டு ,அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கேட்டால் உடனே அவர்கள் காட்டில் ஏதாவது மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவார்கள் என்று நாம் இங்கிருந்து கொண்டு அழகாக சொல்லி விடுவோம்
   ஆனால் அவர்கள் சாப்பிடுவதை விட ஆடம்பர வாழ்க்கை வாழும் கலாசார முன்னேற்றமுடைய மக்களே அதிகம் உண்கின்றனர் மாமிசங்களை ,தனக்கு உண்பதற்காகவே கம்பனிகள் வைத்து உற்பத்தி செய்து மாமிசம் உண்பவர்கள் அல்ல காட்டில் வாழ்பவர்கள் தன் தேவைக்காக மற்றவர்களை வெட்டிக் கொல்பர்கள் அல்ல,தனக்கு கிடைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துண்பதே அவர்களின் பண்பாடு 
  ஆனால் பசியாலும் பட்டினியாலும் வாடி உயிரைவிடுவது இவர்களே அதிகம் இவர்களைக் காப்பாற்ற உண்ண உணவு கொடுக்க யாருமே முன் வருவதில்லை 
  தான் நினைக்கும் செயல்கள் நிறைவேறவேண்டும் என்று கோவில் கோவிலாக செலவு செய்து கொண்டு செல்கிறார்கள் அது நிறைவேறினால் சாமி தான் நிறைவேற்றினார் என்று கோடி கோடி யாய் உண்டியலில் போட தயாராய் இருக்கின்றனர் ஆனால் ஒரு வேலை உணவு கொடுக்க தயாராக இல்லை அந்த கடவுள் கேட்டாரா எனக்கு கோடி கோடி யாய் கொட்டுங்கள் என்று அப்படி அவன் கேட்பவனாக இருந்திருந்தால் இவர்களுக்கு உணவில்லை என்று அவனுக்கு தெரிந்திருக்குமே அவர்களுக்கு கொடு என்று சொல்லியிருப்பானே ஆனால் அப்படி சொல்ல அவன் வரமாட்டான் தனக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்க அவன் கடவுளா அல்லது மானிட ஜென்மமா ?
  மழை வருகிறது தொடர்ந்து நான்கு நாட்கள் மழை நீடிக்கும் என்று அறவிப்பு வந்த உடனே பலர் கவலைப்படுவது தன் வியாபாரம் நின்று  போய்விடுமே வருமானம் குறைந்து போகுமே என்றும் பலருக்கு விடுமுறை கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும் வரும் 
  ஆனால் தினமும் கூலி வேலை செய்து அந்த பணத்தில் உணவருந்தும் பல குடும்பங்கள் அந்த மழை காலங்களில் என்ன செய்யமுடியும் ,பலரின் வசிப்பிடங்களாக பாதையின் ஓரங்களிலும் மேம்பாலங்களின் அடியிலும் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் 
 சரி இதற்க்கெல்லாம் நாங்கள் என்ன செய்வது என்று தானே மேல் தட்டு மக்களின் கேள்வி உண்மையான கேள்வி ,அதற்க்கு தான் அரசாங்கம் இருக்கிறதே என்று பதிலும் உடனே வரும் அவர்களிடம் 
 தயவு செய்து உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன் அள்ளி கொடுக்கவேண்டாம் ,உங்கள் அருகாமையில் எத்தனையோ குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அதுவே நீங்கள் விரும்பும் கடவுளும் விரும்புவார் எந்த கடவுளும் உதவி  செய்யாதே என்னிடத்திலே கொண்டுவந்து கொடு என்று சொன்னதில்லை அப்படி சொன்னால் அவர் கடவுளே இல்லை இல்லை இல்லை.
   இதற்க்கெல்லாம் ஒரே காரணம் மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட செத்தே போய்விட்டது என்பதே உண்மை ,ஒரு காட்டில் மிருகங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் இருக்கும் மனத நேயத்தில் கால் பங்கு கூட நாட்டிற்குள் இல்லை 
 சாமிக்கு கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறான் ஆசாமிக்கு கொடுக்க தயாராக இல்லை பசித்தவனுக்கு உணவளித்தால் ஓராயிரம் முறை பிர்ரார்த்தனை செய்தததற்கு சமம்   

  உங்களின் மேலான கருத்துக்களை தைரியமாக வெளியிடுங்கள் ................

4 comments:

  1. மனமிருந்தால் கட்டாயம் மார்க்கமுண்டு,,,,,

    ReplyDelete
  2. idhayam valikirathu padikum pozhuthu

    ReplyDelete
  3. !!!!!!!!!!!!!Very good message!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...