Saturday, September 25, 2010

ஆகஸ்ட் 15

ன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள், ஒவ்வொரு வருடமும் நாம் அடிமை வாழ்க்கையில் இருந்து மீண்ட நன்நாள் ஆகஸ்ட் மாதம் 15 தேதி,ஆனால் அந்த நாளை நாமெல்லாம் கொடியேற்றி இனிப்பு வழங்கும் விழாவாக மட்டுமே கொண்டாடுகிறோம் இரத்தம் சிந்தி தன் உயிர்களை விட்டு பல கொடுமைகளை அனுபவித்து தன் உயிர்களை விட்ட நம் முன்னோர்களுக்கு நாம் நன்றி உரைப்பதைக்கூடமறந்துவிட்டோம் ஏனென்றால் அவர்கள் எல்லாம் யார் என்றே இப்பொலுது பல பேர்களுக்கு தெரியாது அந்த அளவுக்கு நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம்,தன்னுடைய பிள்ளைகள் ஆங்கில பள்ளியில் தான் படிக்கவேண்டும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலைக்கு அனைவரும் வெளிநாட்டு மோகத்தில் ஊறிப்போய்விட்டார்கள் உங்களுக்கு இந்த நிலைகிடைத்தது யாரால் தன் விருப்பம் போல் நடக்கும் அளவுக்கு உரிமை கிடைத்தது எப்படி இது இப்ப்பொழுது பலருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை என்னும்அளவுக்குதெரியாதவிசயமாகஆகிவிட்டது நாமெல்லாம் இன்று தன் சொந்த இடத்தில் வசித்துக்கொண்டு இது என் வீடு என் குழந்தைகள் என் தொழில் எனது எனது எனது என்று தன் சுயநல வாழ்வில் ஊறிப்போய்விட்டார்கள் தன் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலைமைக்குநாம்சென்றுகொண்டிருக்கிறோம் நாம் ஆங்கிலவருடப் பிறப்பிற்கு  கொடுக்கும் ஒரு மரியாதையைக் கூட நம் சுதந்திர தினத்திற்கு கொடுப்பதில்லை ,அன்று ஒரு நிமிடம் நம் முன்னோர்களை நினைக்கும் நாளாக கூட அதை செய்யமறுக்கிறோம்,அன்றைய தினம் நம் தொலைகாட்சி முன்பு அமர்ந்து நிகழ்சிகளை பார்ப்பதுதான் நம் சுதந்திரதினம் கொண்டாடுவது ,ஒரு நடிகருக்கு உடல் நிலை சரியில்லைஎன்றால் உடனே பதறிவிடுவோம் ஆனால் நாட்டு எல்லையில் ஐம்பது ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பது ஒரு செய்தியாய் மட்டுமே நாம் நினைப்போம் ,ஒரு நடிகைக்காக கோவில் கட்டுவோம் ,நடிகனுக்காக பாலாபிசேகம் செய்வோம் ரோட்டில் ஒருவர் அடிபட்டு துடித்து கொண்டிருந்தால் அதை வேடிக்கை பார்த்துவிட்டு வெகு சீக்கிரமாக அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுவோம்,                                          இத்தகைய பிழைப்பு தேவையா ?...........................................இன்னும் பல 

2 comments:

  1. Nice post!
    First we start from ours, our family members, friends and our circle..,
    automatically in few years our society 'll change.
    Looking for more society caring poss from you!
    Welcome!

    ReplyDelete
  2. இது தான் நம் கலாச்சாரம் நன்றியைத்தான் அன்றே மறக்க பெரியவர்கள் சொன்னார்கள் ஆனால் நாம் எல்லாமே மறப்பதில் முன்னோடிகள்......

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...