ஐயோ இது என்ன கொடுமை ஏன் இப்படி யார் கொடுத்த சாபம் ஒவ்வொரு மனித பிறப்பிற்கும் தனக்கென்று எந்தவித உரிமையும் இல்லையா ஒவ்வொரு பிறப்பும் மற்றவர்களுக்கு அடிமையா ஏன் இந்த அடிமை வாழ்க்கை யார் கொண்டுவந்தார்கள் இந்த சட்டத்தை தவறு செய்பவர்களை மட்டுமே தண்டனை கொடுக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் உயிரை பறிக்கவல்லவா பயன்படுகிறது நாம் நம்மை காக்க தேர்ந்தெடுக்கும் மனித ஜென்மங்கள் நம்மையே அல்லவா பலி வாங்குகிறது இதற்க்கெல்லாம் யார் காரணம் ஒவ்வொரு மனித மிருகங்களும் தன் பேராசையால் விளைந்த விபரீதங்கள் ஜாதி மதம் இனம் நிறம் என்ற வேறுபாட்டால் வந்த வெறியர்களின் அட்டகாசங்கள் இவர்கள் செய்த பாவம் என்ன நான் இலங்கையை மட்டும் சொல்லவில்லை ஒவ்வொரு ஊரிலும் இந்த நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு மற்ற உயிர்கள் பலியாக வேண்டிய அவசியங்கள் எதற்கு யார் கொடுத்தது தயவு செய்து ஒவ்வொருவரும் யோசிக்கவேண்டும் நாம் அடிமையாய் நமக்குள்ளே நினைத்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை அழித்துகொண்டிருக்கிறோம் எதற்கு இந்த சுதந்திரம் ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் நாம் வாய் திறந்தால் உடனே அடக்குமுறை என்ற பெயரில் போலீஸ் வெறியாட்டம் ஆடிவிடுகிறது இதே உயர் மட்டத்தில் இருந்து பேசினால் அவர்களுக்கு அதே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது போலீஸ் துறை பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் அவர்களும் அடிமைகள் தானே உண்மையிலேயே ஒரு கொசுவுக்கு பயந்து வீட்டை மூடிக்கொள்வதை போன்று தான் நாம் செய்வதும் அந்த கொசுவை அந்த இடத்தில் இருந்து விரட்டுவதை விட்டுவிட்டு நமக்கு எதற்கு என்று ஒடுங்கி செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளோம் ஒரு எலும்பு துண்டை இலவசமாக கொடுத்துவிட்டால் கூட நாம் அடுத்த நிமிடமே அவர்களுக்கு அடிமையாக தயாராக இருக்கிறோம் இது சமீபத்தில் நடந்தது ஒரு பெண் போலீஸ் அதிகாரி ஒரு கடைக்கு சென்று மிரட்டி பத்தாயிரம் லஞ்சமாக கொடு இல்லாவிட்டால் கடையை காலிசெய்து விடுவேன் என்று கூறுகிறார் அதே கடையில் அந்த ஏரியாவை சேர்ந்த ஒரு படித்த நபர் அவரது செல்பேசியில் அதை பதிவு செய்து அவரிடம் காட்டி இதை நான் மேலிடம் வரை சென்று காட்டுகிறேன் இதற்க்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று சொல்லுகிறார் அதற்க்கு அந்த பெண் அதிகாரி அவரின் காலை பிடித்து வேண்டாமென்று கெஞ்சுகிறார் அதையும் பதிவு செய்கிறார் உடனே மேலிடத்திற்கு தகவலும் சொல்லுகிறார் சொன்ன உடனேயே ஐந்து நிமிடத்தில் ஒரு வாகனத்தில் ஐந்து போலீஸ் சார் அங்கு வந்தார்கள் வந்தவுடனேயே செல்பேசியில் பதிவு செய்தவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றுவிட்டார்கள் இது அத்தனையும் அவரது செல்பேசியில் பதிவாகியிருந்தது இது நம் திருப்பூர்க்கு அருகில் நடந்த ஒரு உண்மை சம்பவம் இதில் இருந்து நாம் எந்த அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது .....................இன்னும் பல உண்மைகள்
கடவுளை நேரில் பார்ப்பது அன்பினால் மட்டுமே ,முதல் அன்பு முதல் கடவுள் எல்லாமே தாய்
Subscribe to:
Post Comments (Atom)
கடவுள் வாழும் வீடு . 4
கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம் அனைவருக்கும் , (( நாம் ...
-
தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு ...
-
கடவுள் வாழும் வீடு . 1 வீடு என்பதும் கோவிலே . நம் முன்னோர்கள் சிரித்து மகிழ்ந்...
ஏன் எதற்க்கு என்று தெரியாமலேயே பல உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன இதற்க்கெல்லாம் ஒரு வழியும் இல்லை என்றே தெரிகிறது...
ReplyDeleteஒவ்வொருவரும் உள்ளே இந்த எண்ணங்களை வைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்
ReplyDeleteகொடுமைதான்
ReplyDelete