Tuesday, September 14, 2010

இது நியாயமா?




ஏன் மனித உணர்வுகள் இப்படியெல்லாம் நடக்க வைக்கிறது நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் இது,தன் நிலை மறந்த செயல் இது இன்றைய செய்தி தாளின் முக்கிய தலைப்பு பள்ளி பஸ்மோதி மாணவர் பலி பள்ளிக்கூடம் தீ வைத்துஎரிப்பு அந்த பள்ளி பஸ் டிரைவரின் குறைபாட்டினால் நடந்ததா?அல்லது அந்த பையன் தவறுதலாக அந்த பஸ்சில் விலுந்தானா என்று முடிவு தெரியாமலே அங்கு நடந்த கொடுமை இது, அந்த பள்ளி நுழை வாயில் முன்பு கூட்டமாக கூடிய அந்த பையனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களும் அந்த பஸ்சை முதலில் அடித்து நொறுக்கினார்கள் அடுத்து செய்த செயல் அங்கிருந்த மாணவ மாணவியர்களையும் ஆசிரியர்களையும் விரட்டியடித்துவிட்டு அங்குள்ள 140 வகுப்பறையில் உள்ள அனைத்து பொருள்களையும் கணினி ஆய்வகம் அடித்து நொறுக்கியதோடு நிற்க்காமல் அதையெல்லாம் தீ வைத்தனர்  அதைவிட கொடுமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஆவணங்களுக்கும் தீ வைத்தனர் அதில் அங்கு படித்து கொண்டிருக்கும் அத்தனை பேருடைய சான்றிதழ்கள்,அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஆசிரிய-ஆசிரியைகளின் கல்வி சான்றித்ழ்கள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கினர்  மற்றும் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரின் கார் அவரது வீட்டிற்க்கும் சென்று வீட்டில் உள்ள அனைத்து பொருள்கள் ,மற்ற இடங்களுக்கு சென்றிருந்த பள்ளி பேருந்துகளையும் தேடி சென்று அடித்து தீயிட்டனர் சரி இதெல்லாம் ஒரு உயிர் போன ஆத்திரத்தில் தானே செய்துவிட்டார்கள் என்று நினைக்கலாம் ஆனால் அங்கு வேலை செய்த ஆசிரிய ஆசிரியைகள் என்ன பாவம் செய்தார்கள்,அவர்கள் வாங்கிய சான்றிதழ்கள் யார் தருவது இப்பொழுது பள்ளியை மூடிவிட்டார்கள் அங்கு படித்துகொண்டிருக்கும் மற்றவர்களின் கதி,இப்பொழுது அந்த மாணவனின் உயிர் திரும்பிவிட்டதா? சரி இது பள்ளி வாகனம் என்பதால் இத்தனை ஆர்ப்பாட்டம் இதுவே மற்ற வாகனமாக இருந்தால் இதெல்லாம் நடக்குமா?இப்படி ஆத்திரத்தில் நடந்தது தான் தர்மபுரியில் கல்லூரி பஸ்எரித்ததும் ஆனால் இன்று அது யாருக்காக நடந்ததோ அவர்களின் சுகபோக வாழ்க்கைக்காக அதை செய்தவர்கள் இன்று தூக்குகயிற்றிர்க்குஇரையாகப்போகிறார்கள்அவர்கள் இறந்துவிட்டால் மட்டும் அந்த எரிந்த பெண்கள் திரும்பிவரப்போகிறார்களா என்று நினைக்கலாம் அதுவல்ல அது போன்று மீண்டும் நடந்துவிடக்கூடாது என்றுதான் ஆனால் எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் நாங்கள் திருந்தமாட்டோம் என்று பறை சாற்றுவதாகவே இது நிகழ்ந்துள்ளது  இது நியாயமா ?

2 comments:

  1. இங்கு நடப்பது பெரியோர்கள் சொன்னது போல் "ஆத்திரத்தில் புத்தி மட்டு" என்பது முழு உண்மையானது

    ReplyDelete
  2. இப்படி நடத்திவிட்டு அவங்க போயிடுவாங்க மத்தவங்க நிலமை தான் கவலையான விசயம்

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...