Thursday, September 23, 2010

எதை நோக்கி செல்கிறது?

இந்தியா இந்த நாட்டில் நாம் பிறந்ததற்கு பெருமையாக இருக்கிறது அதுவும் இந்த தமிழ் நாட்டில் தமிழனாக பிறந்ததிற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ,நம் தமிழ் மக்கள் இல்லாத உலக நாடே இல்லை என்றும் சொல்லூம் அளவுக்கு நம் தமிழ் பெருமை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது வந்தாரை வாழவைக்கும் பூமி நம் தமிழ் நாடு,ஆனால்  இந்த பூமியில் இன்று தன் வீட்டு தன் தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட அதை அப்படியே விட்டுவிட்டு தனக்கு  பிடித்த நடிகரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட செல்கிறான்,விருந்தோம்பலுக்கு பெயர் போன நம் தமிழ் மண் இப்பொழுது மதுபானக் கடைகளில் அழகாக நடந்துகொண்டிருக்கிறது இப்பொழுது நம் பத்து ரூபாய் கூட இல்லாமல் சென்றால் மதுபானக் கடைகளில் நம் நண்பர்களின் முதல் உபசரிப்பு எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக்கொள் நான் பணம் கொடுத்துக் கொள்கிறேன் என்று பெருமையாக சொல்கிறார்கள் ஆனால் நம் வீட்டில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை ஒரு நூறு ரூபாய் கடனாகக் கொடு என்று கேட்டால் அடுத்த நிமிடமே அவர்கள் சொல்லும் பதில் என்கிட்டே எந்த பணம் இருக்கிறது நானே வேறொருவரை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று அமைதியாக சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்துவிடுவார்கள் ,அடுத்து நம் தமிழ் நாட்டு கடற்கரைக்கு உலக அளவில் பெருமையான பெயர் உள்ளது ஆனால் அந்த கடற்க்கரைகளுக்கு ஒரு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்தால் அவர்களை சுற்றி இருபது  முப்பது பேர் நின்றுகொண்டு நாய்களை போல் வேடிக்கை பார்ப்பது ஒரு மாபெரும் கொடுமை இங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது  இப்பொழுதெல்லாம் பார்க்குகள் எல்லாம் காதலர்கள் என்ற பெயரில் பலர் சல்லாபிக்கும் இடங்களாக மாறிவிட்டன,கோவில் கருவறைகள் சாமியார்களின் அந்தப்புரங்களாக மாறிவிட்டது ,கல்விக்கு புகழ் கொடுத்த நாலந்தா பல்கலைக்கழகம் உருவான நம்நாட்டில் கல்வி கொள்ளைக் கூடங்களாக மாறிவிட்டன முக்கியமான ஒரு விஷயம் தமிழகத்தில் மதுபான விற்பனையில் முதலிடத்தை நோக்கி வெகுவேகமாக சென்றுகொண்டுள்ளது அதை விற்பது தமிழ் மக்களின் பாது காவலன் தமிழக அரசுதான் இப்படி ஒரு நாட்டில் பிறப்பது பெருமை தானே................................................................................................................. 

1 comment:

  1. நாமெல்லாம் ஒரு அழிவை நோக்கி வேகமாக பயனிக்கிறோம்......

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...