திருப்பம் எல்லோருக்கும் என் அன்பான வணக்கமுங்க..................................................................................... வாழ்க்கையை பற்றி ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி இது ஒரு சிறிய விசயமா இருந்தாலும் பெரியவங்களுக்கு இது ஒரு மாபெரும் சம்மட்டி அடி அதாங்க காதோட சேர்த்து அறையராதுன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஒரு விஷயம் இது சிலபேருக்கு புடிக்காம கூட இருக்கலாம் அப்படி இருந்தா தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள் என்னடா ரொம்ப ஓவரா இருக்கேன்னு நினைக்கிறிங்களா சரி சரி விஷயத்தை சொல்றேன் திட்டாதிங்க உண்மை சம்பவம் இது கதையல்ல நிஜம் என்னடா விஜய் டி வி ரொம்ப பார்ப்பானோ அப்படிங்கிரிங்களா ?அப்படிப்பட்டது தான் இதோ சொல்லுகிறேன் அவன் பெயர் கதிர் அவன் மனைவியின் பெயர் வசந்தி அவர்களுக்கு ஒரு மகன் ஆறு வயது அவன் பெயர் கமலேஷ் இவர்களுடன் இன்னொருவரும் இருக்கிறார் அவர் கதிரின் அப்பா மாணிக்கம் இவர்கள் குடும்பம் ஊரில் நல்ல மிக வசதியான குடும்பம் அந்த வசதிக்கு முதல் காரணம் மாணிக்கத்தின் அயராத உழைப்பு ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து படிப் படியாக முன்னேறி ஒரு பெரிய போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கினார் தன் மகனையும் நன்றாகப் படிக்க வைத்து தன் நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைத்து நல்ல இடத்தில் பெண்ணெடுத்து அவனுக்கு வாழ்க்கையும் அமைத்து கொடுத்தார் அதன் பின்னர் தான் அவருக்கு அந்த நிகழ்வு நடந்தது அவரது மனைவி சிவகாமிக்கு திடீரென்று மாரடைப்பால் காலமானார் அதன் பின்னர் அவரது நிறுவனத்திற்கு செல்வதை நிறுத்திக்கொண்டு முழுப்பொறுப்பையும் தன் மகனிடமே விட்டுவிட்டு வீட்டில் தன் பேரனுடன் கொஞ்சி தான் சந்தோசமாக இருக்க ஆசைப்பட்டு வீட்டிலேயே இருந்து கொண்டார் ஒரு ஆறு மாதம் அமைதியாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது அவருக்கு சிறிது சிறிதாக விட்டல் மரியாதை குறைய தொடங்கியது சாப்பிடவும் வீட்டில் இருந்த பழையதை போட ஆரம்பித்தனர் அப்பொழுது தன் மகனிடம் சொன்னார் ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏதோ ஒன்னு குடுக்கிறதை சாப்பிடுங்க என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவான் அதன் பின்னர் அவருக்கென வீட்டில் ஒரு ஓரமாக இடம் அதாவது அவர்கள் நாய் வளர்க்கும் இடத்திற்கு பக்கத்தில் படுத்துகொள்ளசொல்லி விட்டனர் அவருக்கென ஒரு தட்டும் தரப்பட்டது இத்தனையும் இவர் யாரிடமும் சொல்லவில்லை சொன்னால் தன் மகனை கேவலமாக நினைப்பார்களே என்று நினைத்து மறைத்துவிட்டார் அவருக்கு ஒரே ஆறுதல் அவர் பேரன் மட்டுமே இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்தது ஒரு நாள் கலையில் அவருக்கு சாப்பாடு போடும் தட்டை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை மாலையில் தன் கணவனிடம் அதைப்பற்றி வசந்தி கூறிக் கொண்டிருந்தாள் அப்பொழுது அந்தப்பக்கமாக வந்த கமலேஷ் அதை கேட்டவுடன் அவர்களிடம் சென்று அந்த தட்டை நான் தான் எடுத்து வைத்தேன் என்றான் எதற்கு என்று அவர்கள் கேட்டதிற்கு அவன் கூறிய பதில் அவர்களை உயிரோடு எரித்ததை போல் உணர்ந்தார்கள் இவ்வளவு சிறு வயது குழந்தைக்கு தோன்றுமென்று அவர்கள் சிறிதும் யோசிக்கவில்லை அவன் என்ன கூறினான் அப்படி ,உங்கள் இருவருக்கும் அப்படி வெளியில் உட்காரவைத்து சாப்பாடு போடவேண்டுமல்லவா அதனால் தான் இப்போதே எடுத்துவைத்தேன் என்றான் இதைவிட எப்படி புரிய வைப்பது ...........................................................இதில் இருந்து என்ன தெரிகிறது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இதுதான் நாம் என்ன செய்கிறோமோ அதுவே மீண்டும் நமக்கும் நடக்கும் சரி நண்பர்களே கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் தயவு செய்து படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துரையை இடுங்கள் அதுதான் நீங்கள் என் பதிப்பை பார்த்ததிற்கு எனக்கு கிடைத்த மாபெரும் விருது ,மீண்டும் சிந்திப்போம் .........................................................................................
கடவுளை நேரில் பார்ப்பது அன்பினால் மட்டுமே ,முதல் அன்பு முதல் கடவுள் எல்லாமே தாய்
Sunday, September 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கடவுள் வாழும் வீடு . 4
கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம் அனைவருக்கும் , (( நாம் ...
-
தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு ...
-
கடவுள் வாழும் வீடு . 1 வீடு என்பதும் கோவிலே . நம் முன்னோர்கள் சிரித்து மகிழ்ந்...
இப்படி பல குடும்பங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது தயவு செய்து இதை பார்த்தாவது திருந்தினால் சரி
ReplyDeleteஇப்படியெல்லாம் ஒரு பொழப்பா?
ReplyDeleteஇப்படியும் வாழ்றதைவிட சாவதே மேல் அவர் சம்பாதித்த சொத்து மட்டும் தேவை ஆனால் அவர் தேவை இல்லையாம் அந்த குழந்தயை பார்த்து கற்றுகொல்லுங்கள்
ReplyDelete