Tuesday, September 21, 2010

என் தாய்

 என் தாயின் விரல்கள் என் மேனியில் தவழ்ந்த அந்த உணர்வுகள் ,அவர்களது மடியில் கொஞ்சி தவழ்ந்த நாட்கள் ,அவள் உச்சி முகர்ந்து பள்ளிக்கு அனுப்பிய நாட்கள் என் வரவை எதிர்பார்த்து வீட்டின் வாயிலிலேயே நின்றுருக்கும் என் தாய் என் முகம் பார்த்ததும் ஆயிரம் பூக்கள் ஒன்றாக மலர்ந்தது போல் அவள் முகம் மலர்ந்து தன் இரு கைகளையும் விரித்து  என்னை வாரியணைத்து முத்தமிடும் அவள் அன்பு, எனக்காக தன் கட்டிய கணவனையே இரண்டாம் பட்சமாக நினைத்து என்னையே தன் கண்களாக பாவித்து ஒரு தூசு கூட என்னை எதுவும் செய்துவிடாமல்  என்னை கட்டி காப்பாற்றிய என்தாயே இன்று தள்ளாடும் வயதில் என் கைகளை பற்றி வருடுகிறாய் அன்று என் உடலில் தவழ்ந்த அதே உணர்வு இன்றும் எனக்கு என் வயது ஏற ஏற நீ மீண்டும் மீண்டும் என்னை குழந்தையாகவே பாவிக்கிறாய் அந்த அன்பு  ஒன்றே போதுமம்மா ஆயிரம் பிறவி எடுத்தாலும் உனக்கே பிள்ளையாக பிறக்கவேண்டும் என்ற வரம் கொடும்மா எனக்கு நீயே தெய்வம் அம்மா ......................

1 comment:

  1. தாயை விட உயர்ந்த சக்தி எதுவுமில்லை

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...