Thursday, September 23, 2010

கடவுள் எங்கே?

அன்பு உள்ளங்களுக்கு என் அன்பான வணக்கங்கள் இது ஒரு பெரிய விஷயம் தான் ஆனால் இதை வெளிப்படுத்தாமல் என்னாலும் இருக்க முடியவில்லை அன்பே கடவுள் இந்த தலைப்பு பலபேர் மனதில் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது  என்னை பல நண்பர்கள் கடவுளை மற்றதோடு ஒப்பிடாதீர்கள் அவர் எல்லாவற்றிர்க்கும் மேலானவர் என்று குறிப்பிடுகின்றனர் தயவு செய்து என்னைமன்னித்துவிடுங்கள் இதை பற்றி பல மகான்கள் பல கோணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அந்த அளவுக்கு என்னால் கூற இயலாது ஒவ்வொருவரின் பார்வையில் பல கருத்துக்கள் இருக்கலாம் என் பார்வையில் கடவுள் என்றால் அன்பின் வெளிப்பாடே கடவுள் அதைப் பற்றி .......... 


நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வரவில்லை கடவுள் என்றால் என்ன என்று என் பார்வையில் கடவுள் என்றாலேஒருவித மாய உணர்வுக்குள் சென்றுவிடுகிறோம் கடவுள்  என்பதன் அர்த்தமே கட+உள் என்று தான், உள்ளத்தை கடந்து பார் உன் உள்ளமே கடவுள் அந்த உள்ளத்தை உற்று நோக்கு அந்த உணர்வுகள் உங்களுக்கு வெளிப்படும் அந்த உணர்வே அன்பாக வெளிப்படும் அதுவே கடவுள் உங்கள் மனதின் வெளிப்பாடு தான் எல்லாமே, கோவிலுக்கு செல்கிறோம் அங்கு கடவுள் இருக்கிறார் என்று எதை வைத்து சொல்கிறோம் அதுவும் நம் உள்ளத்தின் உணர்வுதான்,அங்கு பல அபிசேகங்கள் பல விதமான படையல்கள் செய்கிறார்கள் இதையெல்லாம் அந்த கோவிலில் உள்ள கடவுள் எடுத்துக் கொண்டாரா சரி எடுத்துக்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம் யார் அதை பார்த்தவர்கள் கட்டாயம் யாரும் பார்த்திருக்க முடியாது ஆனால் அதை அவர் எடுத்துக்கொண்டார் என்று நம்பிக்கை நமக்கு தோன்ற வைப்பது நம் உள்ளமே நம் உள்ளத்தில் எது எண்ணங்களாக பிரதிபலிக்கிறதோ அதுவே நாம் வெளிப்படுத்துகிறோம் ஆகா நம் உள்ளம் தான் அனைத்தும் தோன்றவைப்பது அப்ப அது தானே கடவுள் அந்த உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் அதாவது அன்பான எண்ணங்கள்  தோன்ற வைத்து நல்லதை மட்டுமே பார்க்க ,பேச ,செய்ய வைப்பது உள்ளமே,நாம் மற்றவர்களுக்கு உதவ நினைப்பதும் உதாசீனப்படுத்துவதும் ,கோபப்படுவதும் நம் மனத்தின் வெளிப்பாடே, கடவுளுக்கு இத்தனை வேறுபாடுள்ள மனிதர்களை படைத்து அவர்களின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டிருப்பவரா? ஒவ்வொருவரிடமும் நீ இப்படி செய்யாதே ,நீ அங்கே போகாதே,என்று வழிகாட்டிக்கொண்டிருக்கிறாரா  இல்லவே இல்லை அவர்களும் நம்முடன் வாழும் மனித உருவங்களாகவே வழிகாட்டுகின்றனர் எப்படிஎன்றால் குழந்தையில் தாய்,தந்தையாக,பள்ளியில் ஆசிரியராக,நல்ல நண்பர்களாக ,நல்ல உறவினர்களாக,இப்படி பல வழிகளில் நமக்கு வழிகாட்டுகிறார்கள் .........................

1 comment:

  1. நாம் வைக்கும் நம்பிக்கையே முதல் கடவுள்

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...