Friday, September 3, 2010

தாய் இதை விட தாயை பற்றி சொல்ல என்னிடம் தகுதி இல்லை பட்டினத்தார் அருளியது                                                                                                          ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்றபோதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?
முந்தித் தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்தி பகலாய்ச்சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்!
அரிசியோ நான் இடுவேன்ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?
அள்ளி இடுவது அரிசியோதாய் தலை மேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்?-மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்டதீ தென் இலங்கையில்
அன்னை இட்டதீ அடிவயிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே!
வேகுதே தீயதனில்: வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பணியேன் ஐயகோ!-மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோனகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தாள் அன்னை,வீதிதனில் இருந்தாள்!
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்-பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!    இது பாடலாக அவர் இயற்றியத்தை அப்படியே வழங்கிவிட்டேன் பொறுமையாக வாசிங்கள் இதையே நீங்கள் சுவாசயுங்கள் .....                                                                                                                                                              அன்பான வாசக நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் இன்று முதல் என் இதயம் பேசுகிறது பக்கங்களாக வெளியிடுகிறேன் தயவு செய்து படித்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் ............. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

2 comments:

  1. இவ்வளவு அழகாக தாயை பற்றி யாரும் சொல்ல முடியாது இது உயிர் கொடுத்த தேவதை இவள்.......

    ReplyDelete
  2. உண்மை இதை பார்த்தவுடன் என் கண்கள் தானாகவே கலங்குகிறது நன்றி மீண்டும் அற்புதமான பதிப்பை கொடுங்கள்

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...