Thursday, September 9, 2010

யார் இது ?

என்னிடம் எதுவுமில்லை விட்டு செல்வதற்கு,நான் ஏன் பிறந்தேன் என்றும் நான் ஏன் இறக்கிறேன் என்றும் எனக்கு தெரியவில்லை,எதற்க்காக இந்த பூமியில் ஒரு பெண்ணின் வயிற்றில் உருவானோம்,எப்படி உருவானது, இந்த உடல் எப்படி வந்தது இந்த முக அமைப்பு, நான் அழகானவனாக அல்லது அழகில்லாதவனாக  எப்படி இது யார் கொடுத்தார்கள், எதற்கு இந்த உடல் வளர்ச்சி இந்த உடலுக்கு ஒரு பெயர் எதற்கு, குழந்தை பருவத்தில் இத்தனை அன்பு பாசம் கவனிப்பு வளர வளர ஏன் இத்தனை கண்டிப்பு,அங்கே செல்லாதே,அவர்களிடம் பேசாதே,அவர்களை தொடாதே,எல்லாம் ஒரே உடல் தானே எதற்கு இந்த பாகுபாடு,எதற்கு இந்த படிப்பு, பணக்காரன் ஏழை ஒரு பக்கம் சொகுசான வாழ்க்கை,இன்னொரு பக்கம் சாப்பாட்டிற்கே வழியில்லாத வாழ்க்கை, உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி எதற்கு இந்த உடல்களுக்கு இத்தனை வேறுபாடு,ஒரு திருமணம் என்ற ஒருவிழா,அதனால் சில உடல்கள் மீண்டும் பிறப்பு அந்த உடல்கள் சொகுசாக வாழ நாம் முன்னரே சம்பாதித்து வைத்துவிட்டு பின்னர் இந்த உடல் வயது ஏற ஏற அதன் மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது , பணம் சம்பாதித்து வைத்திருந்தால் ஒரு கவனிப்பு இல்லையென்றால் புறக்கணிக்கப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் இந்த உடல் யாராலோ அழிக்கப்படுகிறது,இதெல்லாம் யாரால் நடத்தப்படுகிறது எதற்க்காக இதெல்லாம் நடக்கவேண்டும் இதை யாரிடம் கேட்பது இதற்க்கு ஞானிகள்  என்ற உடல்கள் சொல்கிறதாம், ஞானிகளும் உடல்தானே, உயிர் என்பது ஆன்மா அதற்க்கு எப்பொழுதும் அழிவில்லை உடல் மட்டுமே அழிகிறது அது மீண்டும் அடுத்த உடலாக பிறக்கிறது என்று. என் கேள்வி அதுவல்ல ,அந்த ஆன்மா எதற்க்காக உடலாக பிறப்பெடுக்கவேண்டும்,அது ஆன்மாவாகவே இருக்கலாமே எதற்கு உடலாக பிறந்து மீண்டும் மீண்டும் அழியவேண்டும் யார் இதை செய்கிறார்கள் இதற்க்கெல்லாம் விடை தெரியாமலேயே என் உடல் எரிந்துகொண்டிருக்கிறது............................................இது கட்டாயம் ஒவ்வொரு மனதிலும் பல எண்ணங்களை தோற்றுவிக்கும் என்று நான் நம்புகிறேன் இதை படித்துவிட்டு கட்டாயம் உங்கள் பார்வைகளை ஓட்டாக பதிவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் .............

3 comments:

  1. உன்மையிலேயே இதர்க்கு விடை தெரியாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  2. தெரியாமலே தான் வாழ்கிறோம்

    ReplyDelete
  3. எதுக்கு இந்த வாழ்க்கை

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...